விளையாட்டுச் செய்திகள் ,
லிவர்பூல் அணி செம்பியன்
Posted by
Puththelil
Published on
Friday, August 8, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணி செம்பியன் அணியாக தெரிவாகியது. இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் விம்பிள்டன் அணிகள் விளையாடும் தகுதியைப் பெற்றன. எனினும் இறுதிப் போட்டியில் விம்பிள்டன் அணி விளையாடாத நிலையில் புத்தளம் லீக் அணிக்கும் லிவர்பூல் அணிக்குமிடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.
அதில் லிவர்பூல் அணி 4க்கு 1 கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரோட்ரிகோ, புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் தலைவர் எச்.எம்.எம். சபீக், செயலாளர் ஜே.எம். ஜவ்ஸி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
புத்தளம் உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணி செம்பியன் அணியாக தெரிவாகியது. இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் விம்பிள்டன் அணிகள் விளையாடும் தகுதியைப் பெற்றன. எனினும் இறுதிப் போட்டியில் விம்பிள்டன் அணி விளையாடாத நிலையில் புத்தளம் லீக் அணிக்கும் லிவர்பூல் அணிக்குமிடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.
அதில் லிவர்பூல் அணி 4க்கு 1 கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரோட்ரிகோ, புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் தலைவர் எச்.எம்.எம். சபீக், செயலாளர் ஜே.எம். ஜவ்ஸி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments