நிகழ்வுகள் ,
தரம் 8 பெற்றோர் குழுவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் வருடாந்த பெற்றோர் கூட்டமும்
Posted by
Puththelil
Published on
Thursday, March 13, 2014
( Zahira Media Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 8 பெற்றோர் குழுவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் வருடாந்த பெற்றோர் கூட்டமும் இன்று ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டு தரம் 7 பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.
2013ஆம் ஆண்டு தரம் 7ல் கற்பித்த ஆசிரியர்கள், பகுதித் தலைவர் எம்.எச்.எம். சலீம் மரைக்கார், ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். தரம் 8 பெற்றோர் குழுவின் தலைவர் ஏ.டப்ளிவ்.எம். சகீன் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூபினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
0 comments
Readers Comments