பிரஜா சக்தி செயற்குழுவுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு
(அபூ ஹன்னான் )
"வளமான நாடு - பாதுகாப்பான வாழ்க்கை" எனும் தொலைநோக்கை கொண்ட அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு "பிரஜா சக்தி" வேலை திட்டத்தின் கீழ் கிராமமட்ட பிரஜா சக்தி குழு தலைவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (11) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம் பைசல் அவர்களின் தலைமையில் பிரஜா சக்தி கிராமிய குழு தலைவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அரசியல் பிரமுகர் ஒருவரை தலைவராகவும், அப்பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தரை செயலாளராகவும், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தரையும் செயற்குழு உறுப்பினர்களாக கொண்ட பிரஜா சக்தி செயற்குழு இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








0 comments
Readers Comments