<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா மாணவர்கள் கயோதான் மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டியில் பரிசு பெற்றனர்

( Zahira Media Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள்  கயோதான் மார்ஷல் ஆர்ட்ஸ் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டப்  போட்டியில் பரிசு பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் இன்றைய காலைக் கூட்டத்தில் இடம் பெற்றது.
ஏ.ஆர். பஹ்மான் ( தரம் 9 ) ஏ.ஆர். பௌஸான் ( தரம் 8 ) எம்.ஆர். முஹம்மத்         ( தரம்  7 )  எம்.ஏ. அப்ளல் அஹ்மத் ( தரம் 8 ) ஆகிய மாணவர்களே தேசிய மட்டப்  போட்டியில் பரிசு பெற்றவர்களாகும்.  இந்த நிகழ்வில் கயோதான் பிரதம பயிற்றுவிப்பாளரும் கராட்டே  பயிற்றுவிப்பாளருமான எம்.ஏ.என்.எஸ். மல்லவாரச்சி விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
 ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் கயோதான் மார்ஷல் ஆர்ட்ஸ் சங்கத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 

 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors